×

சீர்காழி ஆர்டிஓ அலுவலகம் எதிரில் பட்டுபோன மரத்தால் விபத்து அபாயம் அப்புறப்படுத்த கோரிக்கை

சீர்காழி, டிச.20: சீர்காழி ஆர்டிஓ அலுவகம் எதிரே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் பட்டுப்போன மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகே அரசூரில் ஆர்டிஓ அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் ஏராளமானவர்கள் பல்வேறு பணிகள் சம்பந்தமாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தூங்குமூஞ்சி மரம் பல மாதங்களாக பட்டுபோய் எப்போது முறிந்து விழுமோ என்ற அபாய நிலையில் இருந்து வருகிறது. இதனால் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வருபவர்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன் பட்டுபோன மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sergey RTO Office ,
× RELATED மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம்...